பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது! - ஜேவிபி
கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தவறிவிட்டது, இது சாதாரண மக்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரிசிக்கான அதிகபட்ச விலையை அரசாங்கம் வர்த்தமானி செய்திருந்தாலும், அரிசி கட்டுப்பாட்டு விலையில் எங்கும் கிடைக்கவில்லை.
வர்த்தகர்கள் அரசாங்க உத்தரவுகளை மீறுவது குறித்து நுகர்வோர் அதிகார சபை மௌனமாகவே உள்ளது. ஒரு கிலோ நாட்டரிசி 125-130 ரூபா, ஒரு கிலோ சிவப்பு மற்றும் பச்சை அரிசி 120 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.
அதே நேரத்தில், ஒரு கிலோ சம்பா அரிசி . 160-175 ரூபாவுக்கும் கிடைக்கவில்லை. ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் 800-900 ரூபாவாக விற்கப்படுகிறது.
இதேவேளை எரிவாயு விலையை 700 முதல் 800 ரூபா வரை உயர்த்த முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.