தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதியுயர் சபையில் கடுமையாக சாடிய நீதி அமைச்சர்

Dr Wijeyadasa Rajapakshe S Shritharan Tamil National Alliance
By Rakesh Jan 12, 2024 05:54 AM GMT
Report

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தூற்றியுள்ளார்.

தமிழர்கள் படுகொலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், சிங்களவர்கள் படுகொலை தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் பரஸ்பரம் கேள்விக்கணைகளைத் தொடுத்து காரசாரமாகத் தர்க்கம் செய்த நிலையில் கூட்டமைப்பினரைத் தூற்றினார் நீதி அமைச்சர்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நீதிமன்றம், நியாய சபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் உள்ளிட்ட நீதிமன்றத்துடன் தொடர்புடைய ஐந்து சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய சிறீதரன் எம்.பி., நீதி அமைச்சரால் நேற்றுமுன்தினம் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் கடுமையாக அதனை விமர்சித்தார்.

வற் வரி அதிகரிப்பினால் பாதிக்கப்படும் ஒப்பந்தகாரர்கள்

வற் வரி அதிகரிப்பினால் பாதிக்கப்படும் ஒப்பந்தகாரர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதியுயர் சபையில் கடுமையாக சாடிய நீதி அமைச்சர் | Justice Minister Insulted The Tamil Federation

பயங்கரவாதத் தடைச் சட்டம்

சிறீதரனின் உரை முடிந்தவுடன் எழுந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான் நாட்டில் படுகொலைகள் இடம்பெறுகின்றன என்று கூறுகின்றீர்கள். உலகில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாத நாட்டைக் குறிப்பிடுங்கள் பார்க்கலாம் என்றார்.

இதற்குப் பதிலளித்த சிறீதரன், சகல நாடுகளிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளது. ஆனால், இலங்கையில் மட்டும்தான் இந்தச் சட்டமூலத்தின் ஊடாக தமிழ் இனம் கொடுமையாக அழிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் சொந்த மக்களையும், ஏனைய இனத்தையும் அழிப்பதற்குப் பயன்படுத்தப்படவில்லை என்றார்.

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து அன்றே அறிவுறுத்திய சிங்கப்பூர் பிரதமர்..!

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து அன்றே அறிவுறுத்திய சிங்கப்பூர் பிரதமர்..!

இதனால் சீற்றமடைந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருந்ததால்தானா பிரபாகரன் துரையப்பாவைப் படுகொலை செய்தார்.

தமிழர்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் ஏற்றுக்கொண்ட தமிழ்த் தலைவரான லக்ஷ்மன் கதிர்காமரையும் அவர் படுகொலை செய்தார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வன் ஆகியோரைப் படுகொலை செய்தது யார்? தலதா மாளிகை, மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இது சரியானதா? பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாத்திரம்தான் நீங்கள் எதிர்க்கின்றீர்கள் முன்னாள் எம்.பி.ஆனந்த சங்கரி ஒருமுறை எனது வீட்டுக்கு என்னைத் தேடி முச்சக்கரவண்டியில் வந்தார்.

வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டின் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று கூறினார். பின்னர் நான் அவரை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிடம் அழைத்துச் சென்று அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தினேன். ஆனால், அவரது மகன் ஹரி ஆனந்தசங்கரி கனடாவில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்துக்கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் கருத்துக்களை கூறுகின்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் இருந்த காரணத்தால்தான் நீங்களும் தப்பியுள்ளீர்கள். தேசிய பாதுகாப்பை எக்காரணிகளுக்காகவும் பலவீனப்படுத்த முடியாது. இங்கு சிங்கள அரசு, தமிழ் அரசு என்பதொன்று கிடையாது. ஸ்ரீலங்கா அரசே நடைமுறையில் உள்ளது. ஆகவே, முட்டாள்தனமான கருத்துக்களைக் கூற வேண்டாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு விமோசனம் கிடையாது. நீங்களே தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதியுயர் சபையில் கடுமையாக சாடிய நீதி அமைச்சர் | Justice Minister Insulted The Tamil Federation

சிறீதரன் கேள்வி

இதன்போது எழுந்து சிறீதரன், முட்டாள்தனம் என்று அமைச்சர் தன்னைத்தானே முட்டாள் எனக் கூறுவதனை வரவேற்கின்றேன். பிரபாகரன் இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

1954 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காலிமுகத்திடலில் தந்தை செல்வா ஜனநாயக வழி போராட்டத்தில் ஈடுபட்டபோது யார் அவரைத் தாக்கிக் கடலில் தூக்கிப் போட்டது? திருகோணமலை - கந்தளாய் பகுதியில் சிங்களப் பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்க 154 விவசாயிகளைப் படுகொலை செய்தது யார்? அப்போது தமிழர்கள் யாரும் ஆயுதம் ஏந்தவில்லை.

ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் சுமை : அம்பலமான ராஜபக்சர்களின் தவறான முடிவுகள்

ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் சுமை : அம்பலமான ராஜபக்சர்களின் தவறான முடிவுகள்

தமிழர் பகுதியில் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த மண்ணில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள் கண்ணை மூடிக் கொண்டா இருந்தீர்கள்? எம்மை முட்டாள் என்று குறிப்பிடும் நீதி அமைச்சரே முட்டாள். இந்த நாட்டில் உங்களின் இனவாதத்தால்தான் ஆயுதம் எம் மீது திணிக்கப்பட்டது. தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள் என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதியுயர் சபையில் கடுமையாக சாடிய நீதி அமைச்சர் | Justice Minister Insulted The Tamil Federation

இதனையடுத்து மீண்டும் எழுந்த நீதி அமைச்சர், சிறீதரன் எம்.பி. 1954 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கூறினார். அப்போது நான் பிறக்கவில்லை. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று அவர் குறிப்பிடுகின்றார். அக்காலப்பகுதியில் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த சிங்களத் தாய்மார்கள் படுகொலை தென்பகுதியில் எத்தனை குண்டு வெடிப்புக்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றவர்கள் நீங்கள். தலதா மாளிகையைக்கூட நீங்கள் விட்டு வைக்கவில்லை. இப்படி உங்களின் பல படுகொலைகளை எங்களினாலும் பட்டியலிட முடியும்.

இந்துத் தலைவர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன்தான் பிரபாகரன் நூற்றுக்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களைப் படுகொலை செய்தார். இராணுவத்தினர் எவரையும் படுகொலை செய்யவில்லை. திராவிட தமிழ்க் கட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் ஆரம்ப காலத்தில் வேறு நோக்கத்துடன் அரசியல் கட்சிகளை ஆரம்பித்தார்கள். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் இணக்கமாக வாழ்வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புவதில்லை. அனைத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதைப் பிரதான கொள்கையாகக் கொண்டுள்ளார்கள் என்றார்.

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சுதுமலை, வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US