ரணிலின் ஆட்சி மூலமே முன்னாள் போராளிகளுக்கு நீதி கிடைக்கும்: இன்பராசா சுட்டிக்காட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசியோ எமது பிரச்சினைகளை தீர்க்க முடியும் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் போராளிகள் தொடர்பான 5 கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (24.08.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள்
மேலும் தெரிவிக்கையில், “புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருந்தோம்.
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் முன்னாள் போராளிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் பதிவிக்காக சண்டை பிடிக்கிறார்களே தவிர முன்னாள் போராளிகள் தொடர்பில் பேசுவதில்லை.
எமது முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்பவர்களும், வெளிநாட்டில் இருந்து எம்மோடு இணைந்து பயணிப்பவர்களும் எம்மை ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க சொன்னார்கள்.
நாம் சந்தித்து ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பேசியிருந்தோம். இதன்போது எமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, நிச்சயமாக எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்ததன் பிரகாரம் எமது கட்சி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளது.” என்றார்.