மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி வேண்டி முறைப்பாடு பதிவு
1990 காலப்பகுதிகளில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் சிறுவர்கள் பெண்கள் பாரபட்சமின்றி விசாரணை என்ற பெயரில் அழைத்து சித்திரவதைக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கோரி கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் நேற்றைறையதினம்(09) முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
35ஆம் ஆண்டு நினைவேந்தல்
சந்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 35 வருடங்கள் கடந்த நிலையில் இது தொடர்பிலான நீதியான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் யாழ் செம்மணி போன்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றுள்ளமையும் அது தொடர்பான எச்சங்கள் மீட்கப்படுகின்ற விடயங்களையும் கருத்திற் கொண்டு குறித்த முறைப்பாடு இக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இராணுவத்தினராலும், ஊர்காவல் படையினராலும், ஒட்டுக்குழுவினராலும் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது.
இந்தப் படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்றாகும்.
இராணுவமுகாம் இருந்த பகுதி
தமக்கான நீதி இந்த நாட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லையெனவும் தமக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் இதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி வழங்கவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
எவ்வாறாயினும் இராணுவமுகாம் இருந்த பகுதி அகழ்வு செய்யப்படவேண்டும் என்பதற்காக இந்த முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
