மக்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்
மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதிய பிரதம நீதியரசர் பீரித்தி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தற்போது தொடரப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் தொடரப்படவுள்ள அனைத்து வழக்குகளையும் விரைவாக பரிசீலனை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு பயனளிக்கும் சேவையை வழங்குவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள் டிஜிட்டல் முறையில் விரைவாக மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதம நீதியரசரான ப்ரித்தி பத்மன் சூரசேனவை மரபு ரீதியாக வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்றுக்கொண்ட போது இந்த விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் உச்ச நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகள், நீதவான்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்ற சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ரஜீவ அமரசூரிய ஆகியோரும் புதிய பிரதம நீதியரசரின் பணிகளை பாராட்டி கருத்து வெளியிட்டிருந்தனர்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri