சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தாக்கல் செய்த நீதிப்பேராணை: நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் நீதிமன்றம் இன்றைய தினம் (23.06.2023) குறிப்பிட்டுள்ளது.
நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இந்த தீர்ப்பை ஒத்திவைக்கும் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
நீதிப்பேராணை மனு
கடந்த 2022, மே 09ஆம் திகதி கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் 'அறகலய' எதிர்ப்பாளர்களால் மீட்கப்பட்ட பெருந்தொகை பணம் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த, மனுவை நிராகரிப்பதற்கு உத்தரவிடுமாறு கோரி தேசபந்து தென்னகோன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக எதிர்ப்பாளர்களால், ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.8 மில்லியன் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தொகை, பின்னர், கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மனு மீதான தீர்ப்பு
எனினும் முரண்பாடுகள் காரணமாக, கொழும்பு கோட்டை நீதவான். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின் அறிக்கையைக் கோரியிருந்தார்.
இதேவேளை, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டாகோகம மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தென்னகோனை சந்தேகநபராகப் பெயரிடுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குச் சட்டமா அதிபர் அனுப்பிய கடிதத்தை இரத்து செய்யுமாறு கோரி, தென்னகோன் தாக்கல் செய்த இரண்டாவது மனு மீதான தீர்ப்பும் எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 16 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
