லசந்த கொலை தொடர்பில் ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் தீர்ப்பு
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவம் தொடர்பில் ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
லசந்த கொலையுடன் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்பு உண்டு என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் லசந்தவின் புதல்வி அமீசா விக்ரமதுங்க டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஹேக் மக்களின் தீர்ப்பாய தீர்ப்பு
கடந்த 13 ஆண்டுகளாக தனது தந்தையின் கொலைக்கு இலங்கை அரசாங்கம் நீதி வழங்க தவறியுள்ள நிலையில், ஹேக் மக்கள் தீர்ப்பாயம் நியாயம் வழங்கியுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு தமது குடும்பத்திற்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல எனவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்கம் மீது அழுத்தம்
ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணை செய்யப்படும் வழக்குகளின் தீர்ப்பு ஊடாக எவரையும் தண்டிக்க முடியாது என்ற போதிலும், அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
மெக்ஸிக்கோ, சிரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் ஊடகவியலாளர்களை பாதுகாக்கத் தவறியுள்ளதாக ஹேக் மக்கள் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது.
Yesterday, the People’s Tribunal at The Hague found the government of Sri Lanka guilty of my father Lasantha Wickrematunge’s murder. The People’s tribunal has achieved justice for my father which the government of Sri Lanka failed to do in 13 years. https://t.co/raYcCO0vc3
— Ahimsa Wickrematunge (@awickrematunge) September 20, 2022