மிக் கொள்வனவே, லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான காரணம்...! - தப்பிச் சென்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி சாட்சியம்!

Gotabaya Rajapaksa Sri Lanka
By Amal May 16, 2022 05:21 AM GMT
Report

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் தாம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், தெ சண்டே லீடர் செய்தித்தாளில் வெளியான மிக் உடன்படிக்கை தொடா்பான தகவல்களே, அவரது கொலைக்கான முக்கிய நோக்கத்தை உருவாக்கியிருக்கலாம் என்று தாம் நம்புவதாக, இலங்கையின் முன்னாள் பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இவர், 2019இல் கோட்டாபயவின் ஆட்சி வந்தவுடன் சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச் சென்றவராவார்.

இந்தநிலையில் நெதர்லாந்து ஹேக்கில் கடந்த 12ஆம் திகதியன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர அமைப்புகளின் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் நடைபெற்ற லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தில் அவர் சாட்சியம் அளித்தார்.

மிக் கொள்வனவே, லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான காரணம்...! - தப்பிச் சென்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி சாட்சியம்! | Mig Deal Revelations Motive For Lasantha S Murder

இதன்போது லசந்தவின் கொலையாளிகள் பயன்படுத்திய கைத்தொலைபேசிகளின் கோபுரப் பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டதாக நிசாந்த சில்வா குறிப்பிட்டார். விக்கிரமதுங்கவுடன் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மற்றும் சாட்சிகளின் சாட்சியங்களும் இந்த விசாரணையின்போது பதிவு செய்யப்பட்டன.

அவர்கள் இலங்கையில் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் பல தடைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

முக்கிய சாட்சிகளான சந்தியா எக்னெலிகொட, பாஷான அபேவர்தன, தில்ருக்ஷி ஹந்துன்நெத்தி மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பரிசோதகர் நிஷாந்த சில்வா ஆகியோரிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

2010 ஜனவரியில் காணாமல் போன கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, அந்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை மற்றும் தமது கணவர் காணாமல் போனதற்கு காரணமான நிகழ்வுகளை விரிவாக விளக்கினார்.

தனது மொட்டையடிக்கப்பட்ட தலை மற்றும் கறுப்பு உடையைப் பற்றி குறிப்பிடுகையில், இரண்டு ஆண் குழந்தைகளின் தாயான தனது கணவரின் வழக்கு தீர்க்கப்படும் வரை மீண்டும் தலைமுடியை வளர்க்கவோ அல்லது கறுப்பு நிறத்தைத் தவிர வேறு எதையும் அணியவோ கூடாது என்ற முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

மிக் கொள்வனவே, லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான காரணம்...! - தப்பிச் சென்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி சாட்சியம்! | Mig Deal Revelations Motive For Lasantha S Murder

2006 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளரான பிரபாஷன அபேவர்தன, புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர், குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் 2005 ஆம் ஆண்டின் கொடூரமான காலத்தில் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை விரிவாக விளக்கினார்.

விக்ரமதுங்க படுகொலை செய்யப்படும் வரையில் அவருடன் பணியாற்றிய ஊடகவியலாளர் தில்ருக்ஷி ஹந்துன்நெத்தி, மிக் விமான ஒப்பந்தம் தொடர்பில் செய்தி அறையில் தமது ஆசிரியருடன் பணிபுரிந்த நினைவுகள் தொடர்பில் விளக்கினார்.

இதேவேளை விசாரணையில் சாட்சியமளித்த லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவின் சார்பில் முன்னிலையான மனித உரிமைகள் சட்டத்தரணி நுஷின் சர்க்கரட்டி, லசந்தவின் மகள் சார்பில் வாசிக்கப்பட்ட வாக்குமூலத்துடன் விசாரணையை ஆரம்பித்தார்.

மிக் கொள்வனவே, லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான காரணம்...! - தப்பிச் சென்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி சாட்சியம்! | Mig Deal Revelations Motive For Lasantha S Murder

ராஜபக்சவின் தவறான ஆட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் பல வருடங்களாக துன்பங்களை அனுபவித்து வந்த மக்கள் ஒரே கடுமையான குரலில் எழுந்து, இந்த தவறான தலைவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு கோருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US