லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு! மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge ) கொலை மற்றும் ஏனைய வழக்குகளின் விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும(Dullas Alahapperuma), விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்தின் முன் வழக்குகள் அல்லது சட்டமா அதிபரால் கையாளப்படும் விடயங்கள் குறித்து அரசாங்கம் கருத்து தெரிவிக்காது என்று தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார்(Keith Noyahr) மீது கடத்தல் மற்றும் தாக்குதல் மற்றும் 11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் கட்டாய காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள் குறித்து அரசாங்கம் பெரும்பாலும் மௌனமாகவே உள்ளது.
11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வேண்டாம் என்று சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம்(Sanjay Rajaratnam), அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார்.
இந்த சம்பவங்கள் நீதிமன்றத்திற்கு முன்பாகவோ அல்லது சட்டமா அதிபரால் கையாளப்படுகின்றன. எனவே இதில் சம்பந்தப்படுவது நெறிமுறை அல்ல என்றும் அழகப்பெரும கூறியுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam