நீதியரசர்கள் வெற்றிடங்களுக்கு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள்
மேன்முறையீட்டு நீதிமன்றின் இரண்டு நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மூன்று பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான மேல் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான கிஹான் குலதுங்க மற்றும் தமித் தோட்டவத்த ஆகியோரை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பரிந்துரைத்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதல்
சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம், வெற்றிடத்துக்காக மூத்த பிரதி மன்றாடியார் நாயகம் மஹேன் கோபால்வாவை பரிந்துரைத்துள்ளார்.
இவற்றில் இரண்டு பெயர்களை அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி விக்ரமசிங்க சமர்ப்பிக்கவுள்ளார்.
இதேவேளை, நீதியரசர் புவெனக அலுவிஹாரே ஓய்வுபெறவுள்ள நிலையில், உயர்
நீதிமன்றில் வெற்றிடமொன்று ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 13 மணி நேரம் முன்

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
