சகோதரத்துவத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக யாழ்ப்பாணம் நோக்கி பயணம்
சகோதரத்துவத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக யாழ்தேவி தொடருந்தில் கொழும்பிலிருந்து ஆரம்பித்த பயணத்தில் கிளிநொச்சியிலிருந்தும் பலர் இணைந்தனர்.
சகோதரத்துவத்தினை நினைவுகூரும் விதமாக சோஷலிச இளைஞர் சங்கம் யாழ்தேவி தொடருந்தில் யாழ்ப்பாணத்துக்கு ஆரம்பித்த பயணமானது 1.40 மணியளவில் கிளிநொச்சி தொடருந்து நிலையத்தை வந்தடைந்தது.
சகோதரத்துவ நாளாக மாற்றும் முயற்சி
'கறுப்பு யூலை' என வர்ணிக்கப்படும் திகதியை, இனவாத நினைவாக அல்லாது சகோதரத்துவத்தினை நினைவுகூரும் நாளாக மாற்றும் முயற்சியை இலங்கையின் இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் இன்னொரு கட்டமாக, சகோதரத்தினைப் பெருமைப்படுத்தும் நாளில் யாழ்தேவி புகையிரதத்தில் சகோதரத்துவ அன்பினை ஏந்தியவாறு, பல நிகழ்ச்சிகளுடன் வடக்கு நோக்கி பயணிக்கப்படுகின்றது.
கலந்து கொண்டவர்கள்
கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த வருகையின் நினைவாக மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணமாகச் சென்றனர். அங்கு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
இன்றைய தினம் (24) எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதோடு எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.








