சகோதரத்துவ தொடருந்தை வவுனியாவில் வரவேற்ற பிரதி அமைச்சர்
சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்த சகோதரத்துவ தொடருந்தை வவுனியா தொடருந்து நிலையத்தில் வைத்து இளைஞர் விவகார, விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஏரங்க குணசேகர வரவேற்றார்.
யூலை 23 இனக் கலவரத் தினத்தை புதிய அரசாங்கம் ''சகோதரத்துவ தினமாக'' அறிவித்து கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை ''சகோதரத்துவ தொடருந்து'' என்ற பெயரில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் பயணித்து யாழில் இத் தினத்தை கொண்டாடவுள்ளனர்.
அந்தவகையில், கொழும்பில் இருந்து சகோதரத்துவ தொடருந்து என்ற தொனிப் பொருளுடன் வந்த யாழ்தேவி கடுகதிப் தொடருந்தை இளைஞர், விவகார விளையாட்டுத் துறை அமைச்சர் ஏரங்க குணசேகர, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வவுனியா மாநகர சபை உறுப்பினர்களான விஜயகுமார், சங்கர், லக்ஸ்சனா ஆகியோரும், வவுனியா இளைஞர் கழக உறுப்பினர்களும் வரவேற்று தெற்கில் இருந்து வந்த இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, குறித்த தொடருந்தில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வவுனியா இளைஞர், யுவதிகள் சிலரும் சகோதரத்துவப் பயணமாக யாழ் நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
