ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Aanadhi Jan 05, 2025 10:48 AM GMT
Report

பெண் ஊடகவியலாளர் ஒருவரின் கணவர் மர்மமாக உயிரிழந்துள்ள சம்பவத்தில் பொலிஸார் கடமை தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரபல சிங்கள ஊடகவியலாளரான ஶ்ரீயானி விஜேசிங்க தனது குடும்பத்துடன் தெஹிவளையில் வசித்து வருகின்றார்.

அவரது கணவர் ஏ.சமரஜீவ ஒரு முச்சக்கர வண்டி சாரதியாக தொழில் புரிகின்றார். இந்நிலையில், கடந்த புத்தாண்டு தினத்தில், சமரஜீவ காலையில் வழமை போன்று பணிக்கு சென்றுள்ளார்.  

கோட்டாபயவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட பிரகீத்.. விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கும் மனைவி

கோட்டாபயவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட பிரகீத்.. விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கும் மனைவி

தொலைபேசி அழைப்பு

எவ்வாறாயினும், பணி முடிந்து வீடு திரும்பாத காரணத்தினால் அவரது மனைவி தனது கணவருக்கு இரவில் தொலைபேசி அழைப்பு விடுத்த போதிலும், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பலமுறை தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்புக்கு பொலிஸார் பதிலளித்துள்ளனர்.

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை | Journalist S Husband Dies Mysteriously

இதேவேளை, தெஹிவளை ஹில் வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் சட்டத்தரணி ஒருவர் தனது வீட்டின் முன் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக தெஹிவளை பொலிஸாருக்கு ஜனவரி 1ஆம் திகதி இரவு அழைப்பு விடுத்துள்ளார்.

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அந்த இடத்தில் விழுந்து கிடந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், பொலிஸ் அதிகாரிகள் குழு மீண்டும் சற்று நேரத்தில் அந்த இடத்திற்குத் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை

எனினும், நீண்ட நேரமாகியும் பொலிஸார் திரும்பி வராத நிலையில், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி இது குறித்து மீண்டும் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு 1990 அம்பியூலன்ஸ் சேவையை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, கீழே விழுந்துகிடந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வௌ்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை | Journalist S Husband Dies Mysteriously

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சனிக்கிழமை களுபோவில போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இறந்தவரின் முதுகில் பலத்த காயங்களும், தலையில் பலத்த இரத்தக்கசிவும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சீசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டத்தரணியின் வாக்குமூலத்தின் பிரகாரம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை தவறினார்களா என்பதை கண்டறிய மேல்மாகாண தென் பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் பணிப்புரையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஆறு வயது சிறுமி: தந்தை கைது

பதுளையில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஆறு வயது சிறுமி: தந்தை கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி இடைக்கால பணிநீக்கம்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி இடைக்கால பணிநீக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US