ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Aanadhi Jan 05, 2025 10:48 AM GMT
Report

பெண் ஊடகவியலாளர் ஒருவரின் கணவர் மர்மமாக உயிரிழந்துள்ள சம்பவத்தில் பொலிஸார் கடமை தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரபல சிங்கள ஊடகவியலாளரான ஶ்ரீயானி விஜேசிங்க தனது குடும்பத்துடன் தெஹிவளையில் வசித்து வருகின்றார்.

அவரது கணவர் ஏ.சமரஜீவ ஒரு முச்சக்கர வண்டி சாரதியாக தொழில் புரிகின்றார். இந்நிலையில், கடந்த புத்தாண்டு தினத்தில், சமரஜீவ காலையில் வழமை போன்று பணிக்கு சென்றுள்ளார்.  

கோட்டாபயவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட பிரகீத்.. விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கும் மனைவி

கோட்டாபயவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட பிரகீத்.. விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கும் மனைவி

தொலைபேசி அழைப்பு

எவ்வாறாயினும், பணி முடிந்து வீடு திரும்பாத காரணத்தினால் அவரது மனைவி தனது கணவருக்கு இரவில் தொலைபேசி அழைப்பு விடுத்த போதிலும், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பலமுறை தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்புக்கு பொலிஸார் பதிலளித்துள்ளனர்.

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை | Journalist S Husband Dies Mysteriously

இதேவேளை, தெஹிவளை ஹில் வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் சட்டத்தரணி ஒருவர் தனது வீட்டின் முன் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக தெஹிவளை பொலிஸாருக்கு ஜனவரி 1ஆம் திகதி இரவு அழைப்பு விடுத்துள்ளார்.

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அந்த இடத்தில் விழுந்து கிடந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், பொலிஸ் அதிகாரிகள் குழு மீண்டும் சற்று நேரத்தில் அந்த இடத்திற்குத் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை

எனினும், நீண்ட நேரமாகியும் பொலிஸார் திரும்பி வராத நிலையில், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி இது குறித்து மீண்டும் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு 1990 அம்பியூலன்ஸ் சேவையை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, கீழே விழுந்துகிடந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபர், களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வௌ்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஊடகவியலாளரின் கணவர் மர்ம மரணம்! ​பொலிஸாருக்கு எதிராக விசாரணை | Journalist S Husband Dies Mysteriously

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சனிக்கிழமை களுபோவில போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இறந்தவரின் முதுகில் பலத்த காயங்களும், தலையில் பலத்த இரத்தக்கசிவும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சீசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டத்தரணியின் வாக்குமூலத்தின் பிரகாரம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை தவறினார்களா என்பதை கண்டறிய மேல்மாகாண தென் பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் பணிப்புரையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஆறு வயது சிறுமி: தந்தை கைது

பதுளையில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஆறு வயது சிறுமி: தந்தை கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி இடைக்கால பணிநீக்கம்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி இடைக்கால பணிநீக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US