தமிழ் ஊடக உலகிற்கு பேரிழப்பு: ஊடகவியலாளர் பாரதியின் இறப்புக்கு இரங்கல்

Douglas Devananda Journalists In Sri Lanka Death
By Theepan Feb 10, 2025 06:55 AM GMT
Report

அச்சு ஊடகத் துறையில் ஆழமான தடங்களை பதித்த சிரேஸ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் மறைவு, தமிழ் ஊடகத் துறைக்கு பாரிய வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊடக அறம் 

அவர் வெளியிட்டுள்ள ஊடகச் செய்தியில் மேலும், "அமைதியான அணுகுமுறைகளையும் ஆழமான கருத்தியலையும் கொண்டிருந்த அமரர் பாரதி, ஊடக அறத்தின் வழிநின்று அனைத்து தரப்பினருடனும் உறவுகளை பேணியவர்.

தமிழ் ஊடக உலகிற்கு பேரிழப்பு: ஊடகவியலாளர் பாரதியின் இறப்புக்கு இரங்கல் | Journalist Barathi Death Douglas Condolence

எமது கருத்துக்களில் இருக்கின்ற நியாயங்களை புரிந்து கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்கியவர். அன்னாரின் இழப்பு, தமிழ் ஊடகத்துறையையும் தாண்டி தமிழ் பேசும் மக்களுக்கே பேரிழப்பாக அமைந்திருக்கிறது.

அன்னாரின் இழப்பினால் துயருற்று இருக்கும் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, தமிழ் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் நினைவு கனத்துக் கிடக்கின்றது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடக உலகிற்கு பேரிழப்பு: ஊடகவியலாளர் பாரதியின் இறப்புக்கு இரங்கல் | Journalist Barathi Death Douglas Condolence

ஈழத்தின் மூத்த ஊடக ஆளுமை இராஜநாயகம் பாரதியின் திடீர் மறைவையொட்டி அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், "பாரதி, அமைதியான பேச்சும் அதிராத சுபாவமும் உங்கள் அடையாளம், ஆழமான பார்வைகளால் அனைத்தையும் அறிந்துவைத்திருந்தவர் நீங்கள். தமிழ் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடமாக உங்கள் நினைவு கனத்துக் கிடக்கின்றது. என்றும் நலம் நாடும் உங்கள் குரலை இழந்துவிட்டோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல் - ராகேஷ்

கட்டைக்காடு கடலில் ஒளி வைத்து சட்டவிரோத கடற்றொழில்: பல்லாயிரக் கணக்கான மீன் குஞ்சுகள் நாசம்

கட்டைக்காடு கடலில் ஒளி வைத்து சட்டவிரோத கடற்றொழில்: பல்லாயிரக் கணக்கான மீன் குஞ்சுகள் நாசம்

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

அநுர அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

அநுர அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US