போலி கல்விச் சான்றிதழை சமர்ப்பித்து பொலிஸ் சேவையில் இணைந்த நபர்
போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவக்கச்சேரியில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தவர்

சாவக்கச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் கடந்த 2020 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்துக்கொண்டுள்ளதுடன் கல்வி தகுதிக்கு தேவையான கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறாத அவர், தேர்ச்சி பெற்றது போன்று கல்விச்சான்றிதழை மாற்றியுள்ளார்.
இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த 2012 ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ளார். அவரது கல்விச்சான்றிதழ் போலியானது என தெரியவந்த போது, அவர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து அவர் கடமைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் பொலிஸ் சேவையில் இருந்து விலகி சென்றதாக அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து எனவும் கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam