மகிந்த தரப்பில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியுடன் இணைவு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், அடுத்து நடைபெறும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலின் கீழ்தான் அவர் போட்டியிடுவார் எனவும் தெரிய வருகின்றது.
அமைச்சரவை மறுசீரமைப்பு
இந்நிலையில் விரைவில் நடைபெறும் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய இது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ தகவல் எதுவும்
வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.