பெரும் விபத்தை சந்தித்த இலங்கை வந்துகொண்டிருந்த கப்பல் : களத்திற்கு நேரடி விஜயம் செய்யும் ஜோ பைடன்
அமெரிக்காவில் கப்பல் மோதி பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச அடுத்த வாரம் பால்டிமோர் செல்ல உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, குப்பைகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோர் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, இந்த கிரேன் மூலம் உரிய குப்பைகள் கொண்டு செல்லப்படுகிறது. நாட்டின் பரபரப்பான துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பலை அகற்றுவதற்கு திட்டம்
இடிபாடுகளில் மூழ்கும் அபாயம் உள்ளதால் நான்கு தொழிலாளர்களின் உடல்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலத்தை மீட்டெடுக்க 60 மில்லியன் டாலர் மத்திய அரசின் அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காப்பீட்டுத் தொகை 3 பில்லியன் டாலரைத் தாண்டும் என்றும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 3,000 அல்லது 4,000 தொன் இரும்புகள் கொண்ட பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள கப்பலை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
