நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. நேருக்கு நேர் சென்ற இரு பாரிய விமானங்கள்
சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும் அபாயத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளன.
இச்சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
காலை 7 மணியளவில் கோல்ட் கோஸ்ட் நோக்கிய திட்டமிடப்பட்ட விமானப் பயணத்திற்காக ஜெட்ஸ்டார் ஏர்பஸ் ஏ320 ரக விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, இழுவை ஊர்தியால் இழுத்துச் செல்லப்பட்ட கட்டார் ஏர்வேஸ் போயிங் 777 விமானத்தை நேராக சந்தித்துள்ளது.
உடனடி நிறுத்தம்..
அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகத்தின் (ATSB) தகவலின்படி, இரண்டு விமானங்களும் உடனடியாக அவசரமாக நிறுத்தப்பட்டன.

இந்தச் சம்பவத்தின் போது ஜெட்ஸ்டார் விமானத்தின் பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A Jetstar Airbus A320 and a Qatar Airways Boeing 777 narrowly avoided a collision during ground operations at Sydney Airport at around 07:00 local time this morning.
— Turbine Traveller (@Turbinetraveler) August 9, 2026
The Jetstar A320, operating flight JQ402 to the Gold Coast, was taxiing under its own power toward the runway for… pic.twitter.com/JwGURCZGIO
மேலும் கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் முன்பக்க சக்கரத்திற்கும், அதை இழுத்துச் சென்ற ஊர்திக்கும் இடையிலான இணைப்பிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியே தமது விமானம் பயணித்ததாகவும், மற்றொரு விமானம் மிக அருகில் வந்ததால் விமானிகள் அவசரமாக பிரேக் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஜெட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுக்கப்பட்ட விபத்து
இதனைத் தொடர்ந்து குறித்த ஜெட்ஸ்டார் விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டு, பயணிகள் பிந்தைய விமானச் சேவைகளுக்கு மாற்றப்பட்டனர்.

அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் (ATSB) இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விமானப் ஊழியர்கள், இழுவை ஊர்தி ஓட்டுநர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் இதர சாட்சிகளிடம் விசாரணைகளை நடத்தவுள்ளதோடல்லாமல் காட்சிகளையும் ஆய்வு செய்யவுள்ளது.
சிட்னி விமான நிலையத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையினால் கடுமையான தாமதங்கள் ஏற்பட்டு வரும் பின்னணியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும், கடந்த ஜூலை 27 ஆம் திகதியும் இதே விமான நிலையத்தில் குவாண்டாஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் மோதும் அபாயத்திலிருந்து தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.