தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்
காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பில் இன்று(1) உயர் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
பயணத்தடை
அதன் பின்னரே தாம் “கோட்ட கோ கம” போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

'கோட்ட கோ கம' ஆயுதப் படைகளால் அழிக்கப்பட்ட பின்னர் ஜூலை 25 மாலை தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பில் இருந்து தனக்கு எதிராக பொலிஸார் பயணத் தடையைப் பெற்றுள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எனவே தம்மை கைது செய்வதை தடுக்குமாறு அவர் நிதிமன்றில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan