என்னை சேர் என அழைக்க வேண்டும்,நான் வரும் போது எழுந்திருக்க வேண்டும்? - ஜீவன் தொண்டமான் பணிப்பு
ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தன்னை ஐயா (சேர்) என அழைக்க வேண்டும் எனவும், தான் வரும் போது எழுந்து நிற்க வேண்டும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஏனையோருக்கு அறிவித்துள்ளதாகச் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
தான் வயதில் குறைந்தவர் என்பதால், சிலர் தான் வரும் போது ஆசனங்களிலிருந்து எழுந்திருப்பதில்லை எனவும் ஐயா என அழைப்பதில்லை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ராஜாங்க அமைச்சரின் இந்த உத்தரவு காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில சிரேஷ்ட உறுப்பினர்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரியவருகிறது.