அமெரிக்காவின் புதிய வரியால் முதலில் பாதிக்கப்பட போவது நாம் தான் - ஜீவன் தொண்டமான்
அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரியினை குறைக்காவிட்டால் முதலில் பாதிக்கப்பட போவது தேயிலை தோட்டங்கள் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
லிந்துலை அக்கரப்பத்தனை பகுதியில் நேற்று(24.04.2025) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
“அமெரிக்கா ஏற்றுமதிப் பொருட்களின் மீதே வரி விதித்துள்ளது. இதனால் தேயிலை ஏற்றுமதி பாதிப்படையும்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மிக பெரிய பிரச்சினையாக அமையும். அத்துடன், பறிக்க வேண்டிய தேயிலையின் எடையும் அதிகரிக்கும்.
ஆனால், எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, ஜனாதிபதி காரியாலயத்திலிருந்து இதுவரையில் யாருமே வரிக்குறைப்பு சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
