இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலமானார்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜயானந்த வர்ணவீர தனது 64ம் வயதில் இன்று காலமானார்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஓருவராக வர்ணவீர திகழ்ந்தார்.
1986 முதல் 1994 வரை இலங்கைக்காக 10 டெஸ்ட் போட்டிகளிலும், 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்காண்டதன் பின்னர், அவர் காலி சர்வதேச மைதானத்தின் பராமரிப்பாளராக (Curator) பணியாற்றினார்.
1986ம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற வர்ணவீர 1994ம் ஆண்டு தனது இறுதிப் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற காலத்தில் பந்து வீச்சு பாணி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவினால் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன், சர்வதேச போட்டிகளில் எவ்வித பங்களிப்பும் வழங்கக் கூடாது என மூன்றாண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, “ஜயானந்த வர்ணவீராவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். இவ்வளவு விரைவாக அவர் மறைந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அமைதியாக உறங்குங்கள் நண்பரே, ஆடுகளம் உங்களை மெதுவாக தழுவட்டும்,” என பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் ரொசான் அபேசிங்க இரங்கல் வெளியிட்டுள்ளார்.
வர்ணவீராவின் இறுதிச்சடங்கு தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
