ரொக்கெட் மூலம் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஜப்பான்
ஜப்பான்(Japan) விண்வெளி ஆய்வு நிறுவனம் புதிய H3 ரொக்கெட் மூலம் செயற்கைக்கோளை (Daichi-4 (ALOS-4)) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
குறித்த ரொக்கெட்டானது நேற்று முன்தினம் விண்ணிற்கு செலுத்த இருந்த நிலையில் சீரற்ற காலநிலை நிலை காரணமாக தள்ளிவைப்பட்டது.
இந்த நிலையில் டனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து நேற்று(01.07.2024) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திரவ எரிபொருள்
சுமார் 15 நிமிடம் 34 வினாடிகளில் ரொக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து சென்றதாகவும், அதன்பின் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
H3 வகையைச் சேர்ந்த ரொக்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டு 14 நிமிடத்தில் 2ஆம் வகை என்ஜின் செயல்படாமல் வெடித்து சிதறும் நிலை ஏற்பட்டது.
அதன்பின் 2ஆவது முறையாக கடந்த பெப்ரவரி மாதம் H3 இரண்டு நிலை திரவ எரிபொருள் ரொக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியது.
H2A வகை ரொக்கெட் தற்போது பயன்படுத்தப்படுவதோடு, இதற்கு மாற்றாக H3 வகை ரொக்கெட் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
H2A ராக்கெட்டை விட 1.3 மடங்கு அதிகமான சரக்குகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட H3ரொக்கெட் H2A ராக்கெட்டை விட பாதி அளவே செலவினம் கொண்டது.
1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 9 வருடங்களுக்கு முன்னதாக இந்த ரொக்கெட் உருவாக்கும் பணியை ஜப்பான் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
