இலங்கையுடன் ஜப்பான் இன்னும் உடன்பாட்டை எட்டவில்லை
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பான உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்குவதற்கு இலங்கையுடன் ஜப்பான் இன்னும் உடன்பாட்டை எட்டவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் உயரதிகாரியை கோடிட்டு ரொய்ட்டர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மாநாட்டுக்கு இணைத்தலைமை வழங்குமாறு ஜப்பானிடம் கோரியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனை மையப்படுத்தியே ஜப்பானிய அதிகாரியின் கருத்து வெளியாகியுள்ளது.
எனினும் இந்தியப் பெருங்கடல் தீவு தேசத்தின் கடன் மறுசீரமைப்பில் ஜப்பான்
முழுமையாக ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்றும் ஜப்பானிய அதிகாரி
குறிப்பிட்டுள்ளார்.