வடகொரிய ஏவுகணையை சுட்டுவீழ்த்த தயாராகுங்கள்! ஜப்பானின் உத்தரவினால் அச்சத்தில் உலக நாடுகள்
வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் தனது எல்லைக்குள் நுழைந்தால் அதை சுட்டு வீழ்த்துவதற்கு தயாராகுமாறு ஜப்பான் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான தயாரிப்புகள் தொடர வேண்டும் என்று கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில், செயற்கைக்கோள்கள் ஏவுவதாககக்கூறி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா ஏவி சோதித்த நிலையில், அந்த இரு ஏவுகணைகளும் ஜப்பானின் ஒகினாவா தீவு வழியே சென்றதாக கூறப்படுகிறது.
தற்காப்புப் படைகளுக்கு அறிவுறுத்தல்
இந்நிலையில், செயற்கைக்கோளை செலுத்த உள்ளதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாக இராணுவத்திடம் ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹமாடா தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்க உத்தரவிட முடியும்" எனவும், தேவையான தயாரிப்புகளைச் செய்யுமாறு தற்காப்புப் படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஏவுகணையின் சேதத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இராணுவத்திற்கு ஹமாடா அறிவுறுத்தியுள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
