வடக்கு கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி
வடக்கு கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் 1,343,202 டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
அதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 400,000 சதுர கிலோ மீற்றருக்கும் அதிகமான நிலம் கண்ணிவெடி இல்லாததாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணிவெடி அகற்றல்
அதன் ஊடாக 3,100க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பவும் சுற்றியுள்ள பகுதிகளின் சுமார் 22,000 மக்கள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுப்படுத்தவும் உதவும் என குறிப்பிடப்படுகிறது.
2002 முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு முக்கிய நன்கொடையாளராக இருந்து வருகிறது.

மேலும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் இதுவரையில் மொத்தமாக 49 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நதியுதவியை வழங்கியுள்ளது.
அதே நேரத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்கள் சமூக-பொருளாதார வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு பிரச்சினையின்றி முன்னேறுவதற்கும் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் மற்றும் தேவையான உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது.
ஜப்பானின் ஆதரவு
சுமார் 23 ஆண்டுகளாக. ஜப்பான் அரசாங்கம் நீண்டகால ஆதரவுடன் இலங்கையில் கண்ணிவெடிகள் மற்றும் போரின் வெடிபொருள் எச்சங்களின் ஆபத்தைக் குறைக்க உதவியாக இருந்துள்ளது.
இந்த உதவியால் 3.9 மில்லியன் சதுர மீற்றர்களுக்கு மேலான நிலத்தை விடுவிக்கவும் ஆயிரக்கணக்கான வெடிப்பொருட்களை அழிக்கவும் முடிந்துள்ளது.

ஜப்பான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவின் மூலம் 303,000 இற்கும் மேலான கண்ணிவெடிகளை அகற்றியதுடன், 121 சதுர கிலோமீற்றர்களுக்கு மேலான நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் 185,000க்கும் மேலான இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமரவும் உதவியுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri