இலங்கையுடனான பேச்சின் போது சீனா தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட ஜப்பான்
இலங்கையுடனான பேச்சுவார்த்தையின் போது, ஜப்பான், சீனா தொடர்பில், அதிருப்திகளை எழுப்பியதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகடானி, சீனாவின் நிலைமையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகள் குறித்து தனது கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
கிழக்கு மற்றும் தென் சீன கடல்களில் சீனாவின் உறுதிப்பாட்டை மனதில் கொண்டு, இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச சூழ்நிலை
சர்வதேச சூழ்நிலையில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவது பிராந்தியத்தின் செழிப்புக்கு அவசியம் என்று நகடானி கூறியுள்ளார்.
ஜப்பானில் பேரிடர் மீட்புப் பயிற்சிகளைக் கவனிக்க இலங்கை இராணுவத்தை அழைப்பது மற்றும் விமான மீட்பு மற்றும் மருத்துவ விமானத் திறன்களை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பது உட்பட, இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்புப் படைகளின் மூன்று பிரிவுகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் இந்த பேசசுவார்த்தையின் போது இணக்கங்கள் எட்டப்பட்டுள்ளன.
இதேவேளை 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர், சீனாவும் இந்தியாவும் செல்வாக்குக்காக போட்டியிடும் இந்தியப் பெருங்கடல் தீவுக்குச் சென்ற முதல் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெராவாகும் என்று ஜப்பானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 20 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri
