ஜப்பானில் இன்று பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவுக்கு அருகில் 6.0 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 10.00 மணிக்கு (02.04.2025) ஜப்பான் நேரப்படி, காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கியூஷு தீவிலிருந்து சுமார் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பிற சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லலை. ஜப்பானிய அரசாங்கம் நேற்று (1) ஒரு அறிக்கையை வெளியிட்டது.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அதில் எதிர்காலத்தில் நாட்டில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 8 முதல் 9 வரை பதிவாகியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானிய அரசாங்கம் மேலும் அந்த அறிக்கையில் நிலநடுக்கம் ஏற்பட 80 வீத வாய்ப்பு இருப்பதாகவும், கிட்டத்தட்ட 300,000 உயிர்கள் இழக்கப்படலாம் என்றும் கூறியிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை (28) மியன்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அந்நாட்டில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகி 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஜப்பானில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam