சொற்போர் நடத்தும் ஜப்பானும் சீனாவும்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்
ஜப்பானின் ஒகினாவா தீவுகளுக்கு அருகே இரண்டு சந்தர்ப்பங்களில், சீன போர் விமானங்கள் ஜப்பானிய இராணுவ விமானங்களை நோக்கி தங்கள் ரேடாரை குறிவைத்ததாக ஜப்பான் குற்றம் சுமத்தியுள்ளளது.
இந்த ரேடார் வெளிச்சங்கள் விமானங்களின் பாதுகாப்பான பறப்பைத் தாண்டிய ஆபத்தான செயல் என்று பிரதமர் சானே தகைச்சி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடந்த இந்த "மிகவும் வருந்தத்தக்க" சம்பவம் குறித்து ஜப்பான், சீனாவிடம் எதிர்ப்பை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள்
இந்தநிலையில், டோக்கியோவில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸை சந்தித்த ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் சிங் ஜிரோ கொய்சுமி, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக சீனாவின் நடத்தைக்கு ஜப்பான் உறுதியாகவும் அமைதியாகவும்" பதிலளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சீன கடற்படை பேச்சாளர்-கேர்னல் வாங் சூமெங், மியாகோ ஜலசந்தியின் கிழக்கே முன்னர் அறிவிக்கப்பட்ட விமானப் பயிற்சியை சீன கடற்படை நடத்தி வந்தபோது, ஜப்பானிய விமானங்கள் மீண்டும் மீண்டும் அணுகி சீன கடற்படையை சீர்குலைத்ததாக பதில் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.