ஜகார்த்தாவில் அதிரடிச் சோதனை: இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது!
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் சட்டவிரோத இணையவழி சூதாட்ட விடுதி மீது நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், வியட்நாம் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 321 வெளிநாட்டவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தோனேசியாவில் இணையவழி சூதாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் குற்றக் கும்பல்களை ஒடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜகார்த்தாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் கடந்த இரண்டு மாதங்களாக இந்தச் சூதாட்ட மையம் இயங்கி வந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் 228 பேர் வியட்நாமையும், 57 பேர் சீனாவையும் சேர்ந்தவர்கள்.
இணையவழி சூதாட்ட மையங்கள்
மேலும் மியான்மர் (13), லாவோஸ் (11), தாய்லாந்து (5) மற்றும் கம்போடியாவை (3) சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர். கைதுசெய்யப்பட்ட 321 பேரில், 275 பேர் மீது இந்தோனேசியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் சூதாட்டக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குற்றத்திற்கு அதிகபட்சமாக ஒன்பது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தச் சூதாட்டக் கும்பல்கள் பெரும்பாலும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களையே இலக்காகக் கொண்டு செயல்பட்டுள்ளதாகப் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
கம்போடியாவிலிருந்து இணையவழி சூதாட்ட மையங்கள் தற்போது இந்தோனேசியாவிற்கு இடம்பெயர்ந்து வருவதாக இன்டர்போல் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது இந்தோனேசியாவில் கடந்த இரண்டு நாட்களில் நடைபெறும் இரண்டாவது பெரிய அதிரடி நடவடிக்கையாகும்.
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று, சிங்கப்பூருக்கு அருகிலுள்ள பாடம் தீவில் இணையவழி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக 210 வெளிநாட்டவர்களை அந்நாட்டின் குடிவரவுத் துறை அதிகாரிகள் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோசப் விஜயாகிய நான்..! பதவியேற்பு விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் - நேரு உள் விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam