இத்தாலிக்கான இலங்கையின் தூதுவராக ஜகத் வெல்லவத்த நியமனம்
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பதவிக்கு பெயரிடப்பட்டிருந்த கலாநிதி ஜகத் வெல்லவத்த (Jagath Wellawatta), இத்தாலிக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நேற்று (22) அறிவித்துள்ளார்.
ஜகத் வெல்லவத்த அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்கவிருந்த நிலையில், அந்நாட்டில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றும் போது, மிகவும் சிரமப்பட்டு ஆங்கில மொழியில் உரையாற்றிய காணொளி கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
ஆங்கில மொழியை பயன்படுத்தும் ஒரு நாட்டுக்கு ஆங்கில மொழியில் புலமையற்ற நபர் தூதுவராக நியமிக்கப்பவது குறித்து சிலர் விசனம் தெரிவித்தனர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே ஜகத் வெல்லவத்த, தற்போது இத்தாலிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 16 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam