விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படத்தை வைத்திருந்த யாழ். வாசி - செய்திகளின் தொகுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் விசாரணைகளின் பின் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தணித்தலின் கீழ் இளைஞர் மீது பி அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,