யாழில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து! 11 முன்பள்ளி மாணவர்கள் வைத்தியசாலையில் (Photos)
யாழில் அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியில் இன்று(14.06.2023) காலை இடம்பெற்றுள்ளது.
முன்பள்ளி ஒன்றுக்கு 11 மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி வீதியோரமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த 11 மாணவர்களும் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த 12 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மேலதிக தகவல் - தீபன்.

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri
