யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மாரடைப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிறி சற்குணராசா மாரடைப்பின் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை நாளை காலை ஏழு முப்பது மணி அளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் நேற்றிரவு அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
என்ற போதும் அவரது உடல்நிலை மோசமான நிலையில் இல்லை என கூறப்படுகிறது.