வெடுக்குநாறி மலை விவகாரம்: யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Video)

Sri Lankan protests University of Jaffna Sri Lanka SL Protest Sri Lankan political crisis
By Theepan Mar 27, 2023 08:10 AM GMT
Report

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் சிவலிங்கம் இடித்தழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய தினம் (27.03.2023) முன்னெடுக்கப்படும் இப்போராட்டம், யாழ். பல்கலைக்கழக முன்றிலில் இடம்பெற்று வருகின்றது. 

குறித்த போராட்டத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மண்திறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, வெடுக்குநாரி மலை கச்சத்தீவு நெடுந்தீவு எங்கள் சொத்து, காவிகளின் அட்டகாசத்துக்கு முடிவில்லையா, இராணுவமே வெளியேறு கடற்படையே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட் திணைக்களமே வெளியேறு போன்ற கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இப்போராட்டத்தின்போது, யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கும் போது,

இனம் தனது சுயநிர்ணயத்தினை தக்க வைக்க வேண்டுமாயின் மொழி, மதம் மற்றும் பண்பாடுகள் என அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் பண்பாடுகளைச் சிதைக்கும் முயற்சியினை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது.

வட கிழக்கில் தொடர்ச்சியாக நிலாவரை, குறுந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு என பல்வேறு நில ஆக்கிரமிப்புகளைச் செய்து பண்பாட்டினை அழித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

பண்பாட்டு அம்சங்களைப் பேண வேண்டிய தொல்பொருள் திணைக்களங்களும் அரசுடன் இணைந்து செயற்படுவதானது தமிழினத்தினை அழிப்பதன் அடிப்படையாகவுள்ளதாகத் தெரிவித்தார். பண்பாடு மற்றும் கலாச்சாரங்களைத் தக்கவைத்து ஒரு இனம் தமது சுய உரிமைகளைக் கேட்டுக் கொள்ளலாம் எனச் சர்வதேசம் கூறுகின்றது.

வெடுக்குநாறி மலை விவகாரம்: யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Video) | Jaffna University Students Protest

உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்

அவ்வகையில் தேசியம், மரவு வழித்தாயகம், சுயநிர்ணயம் போன்றவற்றை இல்லாதொழித்து விட்டால் எவ்வாறு எமது இனத்தினை மீட்பது? அத்தோடு உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

சிங்கள பேரினவாத அரசு தமிழர்களை அடக்கி ஒடுக்கி முழுவதுமாக சிங்கள, பௌத்த நாடாக உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். ஆகவே, இவற்றிற்கு எதிராக மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் குரலெழுப்பி உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இரா.தர்ஷனின் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையிலே எந்த ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் மகிந்த ராஜபக்சவாக இருக்கலாம் கோட்டாபய ராஜபக்சவாக இருக்கலாம் தற்பொழுது ஆட்சி கதிரையில் இடம்பிடித்துக் கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கவாக இருக்கலாம் எதிர்காலத்தில் ஜனாதிபதி கதிரைக்கு ஆசைப்படும் சஜித் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தமது கதிரைகளை தக்கவைக்க வேண்டுமெனில் ஆமத்துறுக்கள் சொல்வனை நிகழ்த்தவேண்டும்.

இல்லையெனில் அவர்களுடைய கதிரைகள் பறிக்கப்படும்.இதற்கான ஒரு முன்னெடுப்பே வடக்கில் திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கல் ஆகும். இது யார் ஜனாதிபதியாயினும் நிகழும் நிச்சயமான சம்பவமே ஆகும்...

மேலும் அண்மையில் கச்சை தீவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா இடம்பெற்றது அங்கு வந்திருந்த இந்திய இலங்கை பக்தர்களுக்குக்கூட ஒழுங்கான வசதிகளை வழங்காத கடற்படை அவ்விடத்திற்கு தமது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற வந்த ஆமதுறுக்களை விசேட கவனிப்புடன் கவனம் செலுத்தினர். அதன் பிரதிபலிப்பு இன்று கச்சைத்தீவில் அமைக்கப்பட்டிருக்கும் பௌத்த விகாரை.

வெடுக்குநாறி மலை விவகாரம்: யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Video) | Jaffna University Students Protest

அதிகாரம் மிகுந்தவர்கள்

வெடுக்கு நாறி மலையில் காடையர்களால் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பூசையை செய்வதற்குப் பூசாரிக்கு நீதிமன்று அனுமதி வழங்கியும் பொலிஸார் இதனை தடுக்கின்றனர்.

இலங்கை பொலிஸ் திணைக்களம் நடுநிலையாக செயற்படுகிறதா? இன்று இந்த போராட்டம் நடக்கும் ஒரு மணியான காலப்பகுதிவரை வெடுக்குநாறிமலைக்கு சாதாரண ஒரு கொஸ்தாபிள் கூட விரையவில்லை. ஆனால் இதே ஒரு பௌத்த விகாரை உடைக்கப்பட்டிருப்பின் எஸ்டிஐஜி டிஐஜி ஓஐசி என பலதரப்பட்ட அதிகாரம் மிகுந்தவர்கள் விரைந்திருப்பார்கள் காரணம் தமது பதவி நிலை பறிபோய்விடும். இவ்வாறு நடுநிலையற்ற பொலிஸாரின் மத்தியிலேயே இங்கே வழிபாடுகளை அச்சத்திற்கு மத்தியில் முன்னெடுத்து வந்த நிலையில் இவ்வாறான சம்பவம் பதிவாகியிருக்கின்றது.

வசந்தே முதலிகேயிடம் இவ் திட்டமிட்ட பௌத்தமயமாகால் உட்பட பத்து கோரிக்கைகளை உள்ளடக்கியே நாம் வட்ஸ்அப்பினூடாக அனுப்பியிருந்தோம் எங்கோ இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாம் கோரிக்கைகளே முன்வைக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்.

வெடுக்குநாறி மலை விவகாரம்: யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Video) | Jaffna University Students Protest

சிங்கள -  பௌத்த மயமாக்குதல்

கடைசி வந்தும் வசந்த முதலிகே எமது கோரிக்கைகளுக்காக இணைந்து வரப்போவதில்லை என்பதனை அவரது இந்த பெல்ரி விடைகளை அளிப்பதன் மூலம் தெளிவுபடுத்தியிருக்கின்றார். இன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற அத்துமீறலுக்கு முடிந்தால் தெற்கில் இந்த திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு போராட்டத்தினை செய்துகாட்டுங்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்று வாருங்கள் இணைந்து போராடலாம்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனூடாக கிடைக்கும் நிதியிலேயே இந்தநாட்டின் படைத்தரப்புக்களுக்கு சம்பளங்களைக் கொடுத்து தொடர்ச்சியாக இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.

ஆக இவ்வாறாக நிதியினை வழங்கும் சர்வதேச நாணய நிதியம் உட்படச் சர்வதேச நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் சபை என அனைத்து தரப்புக்களும் இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமையைச் சிந்தித்து உறுதிசெய்து எந்தவொரு நகர்வையும் முன்னெடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், அளவெட்டி, Toronto, Canada

08 May, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, India, Markham, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Wallington, United Kingdom

03 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, பேர்லின், Germany

29 Mar, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், மிருசுவில் வடக்கு

26 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நியூ யோர்க், United States, Toronto, Canada

09 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Mitcham, United Kingdom, Nottingham, United Kingdom

28 Apr, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US