யாழ். பல்கலையின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாவது நாள் அமர்வுகள்
யாழ். பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதியின் மூன்றாவது நாள் அமர்வுகள் இன்று காலை பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகின.
கடந்த 14 ஆம் திகதி, வியாழக்கிழமை பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
தங்கப் பதக்கங்கள்
அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படுகின்றன.
இன்று மாலை இடம்பெறவுள்ள ஒன்பதாவது அமர்வுடன் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |