நீரில் மூழ்கியுள்ள வீதிகள்..! யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல்
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதி தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீரற்ற காலநிலை
குறிப்பாக, மாதம்பே பகுதியில் வீதி முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளதுடன், “குதிரைக் கோவில்” பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பயணிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும், அவசர தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பயணிக்கும் போது வாகன வேகத்தை குறைத்து பாதுகாப்பாகச் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகின்றது.


