தையிட்டி சர்ச்சைக்கு விரைவில் தீர்வு.. அமைச்சர் பிமல் வாக்குறுதி
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை தொடர்பான சர்ச்சைக்கு எதிர்வரும் சில வாரங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த கருத்துக்கு பதிலளித்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
மத விவகாரங்கள் அமைச்சு மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து தையிட்டி விகாரை பிரச்சினை குறித்த அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
வானூர்தி நிலையத்தின் ஓடுதளம்
அதற்கமைய, மிக விரைவில் தையிட்டி விகாரை பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச வானூர்தி நிலையத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ள நிலையில் வானூர்தி நிலையத்தின் ஓடுதளத்தை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
