யாழ். மாநகர மேயர் வேட்பாளராக நடேசபிள்ளை வித்தியாதரனை களமிறக்குகின்றது தமிழரசுக் கட்சி
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
ந.வித்தியாதரன், சமூக விடுதலைக்காக, சமூக நீதிக்காக, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுத்தாயுதம் ஏந்திப் போராடியுள்ளார்.
ந. வித்தியாதரனை களமிறக்குகின்றது தமிழரசுக் கட்சி
தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் நன்கறியப்பட்டவர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகப் பதவி வகித்த காலகட்டத்தில், இவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்பின்னர் சிறைத் தண்டனையும் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்தம்பித நிலையில் இருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக்குப் புத்துயிர் கொடுக்க முன்னின்று செயற்பட்டவர் இவர் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
