ஆயிரக்கணக்கில் திரண்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்! யாழ். நகரை அடைந்தது போராட்டம் - விண்ணைப் பிளக்கும் கோசங்கள் (Video)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட பேரணி பலாலி வீதியின் ஊடாக யாழ். நகரை வந்தடைந்துள்ளது.
பெருந்திரளான மக்கள் விண்ணைப்பிளக்கும் சத்தத்துடன் கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட பேரணி பலாலி வீதியின் ஊடாக யாழ். நகரை நோக்கி நகர்ந்து வருகின்றது.
எனினும் குறித்த பேரணி எந்த இலக்கை அடையவுள்ளது என்பது தொடர்பிலான தகவல் இதுவரையில் தெரியவரவில்லை.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பரமேஸ்வரா சந்தியை நோக்கி நகர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த போராட்டத்தில் பெருமளவில் பெரும்பான்மை இன மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் களமிறக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மை இன மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்பவற்றை சுட்டிக்காட்டி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியிலும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.









பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
