யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் ஏழு பேருக்கு கோவிட் தொற்று உறுதி
யாழ். மாநகர சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடமாடிய 73 நபர்களுக்கு திடீர் அன்டிஜன் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று மாலை கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் படி 07 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொற்றுக்கான அறிகுறி அதிகரிக்க வாய்ப்புக்கள் இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ். மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார், இராணுவத்தினர்கள் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவர்களுக்கான அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் இன்றி வீடுகளில் இருக்குமாறு சுகாதார பரிசோதகர்களின் வேண்டுகோளினை புறக்கணித்துச் செயற்பட்டதன் காரணமாக இவ்வாறு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri