அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
அரசாங்க ஊழியர்களின் நிர்ணயிக்கப்பட்ட அடுத்தகட்ட சம்பள அதிகரிப்பு, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்படும் என அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சம்பளத்தின் முதற்கட்டம் இந்த வருடத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அடுத்த 3 ஆண்டுகளுக்கு அரசு ஊழியர் சம்பளத்தை 60-80 சதவீதம் அதிகரித்து மூன்று கட்டங்களாக வழங்கும்.

இந்தாண்டு 30 சதவீத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையில் 30 - 35 சதவீதம் அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இருந்து செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனை நெருங்குகிறது. இந்த சம்பள உயர்வு அரச, கூட்டுத்தாபனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அரசு செலவினங்களில் மிகப்பெரிய தொகை அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு உட்பட தொடர்ச்சியான செலவுகளுக்கு செலவிடப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam