யாழில் 75 வயதில் ஓட்டப்பந்தய போட்டியில் முதலிடம் பெற்ற மூதாட்டி - குவியும் பாராட்டு (Video)
யாழ். விக்ரோறியா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றி முதலாவது பரிசினை வென்றுள்ளார்.
யாழ். விக்ரோறியா கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் எஸ். சிவகுமார் தலைமையில் இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.
இதன்போது விளையாட்டு போட்டியில் பழைய மாணவர்களிற்கான ஓட்டப்பந்தய நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றியுள்ளனர்.
இதன்போது ஓட்டப்பந்தயத்தில் குறித்த பாடசாலையில் படித்த 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டு அதற்கான முதல் பரிசினை தட்டிச்சென்றுள்ளார்.
இவ்வாறு சாதனை படைக்க வயது எந்த தடையும் இல்லை என்பதினையும் நிரூபித்து காட்டிய மூதாட்டி புனிதவதியை பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 18 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan