யாழ். பருத்தித்துறை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் (video)
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது ஒரு வாரத்திற்குள் தீர்வு என்ற பொலிஸாரின் வாக்குறுதிக்கமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுருக்கு வலை உட்பட்ட சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கின் 14 கடற்றொழிலாளர் சங்கங்களால் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை வீதியை முற்றுகையிட்டு இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் கடற்றொழிலாளர்களால் போராட்டமொன்று இன்று (03.04.2023) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டமானது பருத்தித்துறை வீதியை மறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது அவ்வழியே வருகைதந்த நீதவானும் போராட்டம் காரணமாக திரும்பிச் செல்ல
வேண்டிய நிலை ஏற்பட்டிடுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
சுருக்கு வலை உட்பட்ட சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று (03.04.2023) வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாதவாறு பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
கடற்தொழிலாளர்களின் பிரச்சினை
கடற்தொழிலாளர்கள் வாழ விடு அல்லது சாகவிடு, கடற்தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு
வலையை உடனடியாக நிறுத்து, தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக
நிறுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள்
குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
