தீவகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது: மு.தம்பிராசா(Video)
அண்மைக்காலமாக தீவகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் தீவகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமை தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வன்முறை சம்பவங்கள்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,"அண்மைக்காலமாக தீவகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தீவகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்படுகின்றவர்களின் பின்னணி தொடர்பாக ஆராயப்பட்டு அவர்கள் தொடர் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால் இவ்வாறான வன்முறை சம்பவங்களை தடுக்க முடியும்.
இதேவேளை வடக்கில் போதைபொருள் பாவனை அதிகரித்துள்ளது. வடக்கில் போதைபொருள் விற்பனை செய்பவர்களுக்கு ஆதரவாக வடக்கில் உள்ள சட்டத்தரணிகள் முன்னிலையாக கூடாது. அவர்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபடவும் கூடாது.
சிவாஜிலிங்கத்திற்கு அவதூறு பரப்பும் விடயம்
மேலும் அரச புலனாய்வு நிகழ்ச்சி நிரலின் படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு அவதூறு பரப்பும் வகையிலான விடயங்கள் சமூக ஊடகங்கள் ஊடாக சில நபர்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தியாகதீபம் திலீபனை நினைவுகூர்ந்ததற்காக சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக எந்த ஒரு தமிழ் கட்சியும் குரல் கொடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.
இந்நிலையில் தமிழ் கட்சிகள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவதன் மூலம் சாதாரண தொழிலாளர்களுக்கும் நாள் கூலிகளுக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது.
மே தினத்தில் தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பதற்காக தமிழ் கட்சிகள் ஒன்றாக
இணைய வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 1 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
