யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது! செ.பிரணவநாதன்
யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று சனிக்கிழமை(31) இரவு முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
யாழ். மாநகர சபை
இந்நிலையில் யாழ். மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும்.
கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள
நிலையில் இன்னமும் அங்கும்
பதில் கிடைக்கவில்லை' என்றார்.



