யாழ். போதனா வைத்தியசாலையில் ஒன்றுகூடிய 200ற்கும் மேற்பட்ட நோயாளிகள்!
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஒரே இடத்தில் இருநூறிற்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒன்று கூடியுள்ளனர்.
இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்றைய தினம் கிளினிக்கிற்கு வந்த வேளை இவ்வாறு ஒன்றுகூடியுள்ளனர்.
இதில் பலர் முகக்கவசங்களை சரியான முறையில் அணியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றில் யாழ். மாவட்டம் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்தின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடு கோவிட்வை மேலும் அதிகரிக்க வழிசமைக்கிறது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த நோயாளிகளது மாத்திரைகளை பிரதேச செயலகம் மூலம் கிராம சேவையாளரூடாக
வழங்கினால் இப்படி நோயாளிகள் ஒன்றுகூட வேண்டிய தேவை ஏற்படாது என அவர்கள்
மேலும் தெரிவித்தனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
