ஜனாதிபதி தேர்தலில் அரியநேத்திரனுக்கு ஆதரவு: யாழ்ப்பாணம் வணிகர் கழகம் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று (29.08.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நீண்டகாலமாக இலங்கையின் ஜனாதிபதியாக வந்தவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்துள்ளனர். இதனால், தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினர் எங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர்.
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை ஆகும். அதனடிப்படையில், பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க நாம் தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam