யாழ்.இளைஞர்கள் இருவர் கதிர்காமம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம்! (Photo)
யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பயணமானது காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் –பண்ணை முனியப்பர் கோவிலடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலவரம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணம் அமையவுள்ளதாக குறித்த இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பயணம் முல்லைத்தீவைச் சென்றடைந்து, அங்கிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு சென்று பின்னர் கதிர்காமம் சென்றடையவுள்ளது.
15 நாட்கள் பயணம்

இதனை தொடர்ந்து அங்கிருந்து காலிநோக்கி சென்று பின்னர் யாழ்ப்பாணம் திரும்பவுள்ளனர். இந்த பயணமானது 15 நாட்கள் கொண்ட பயணம் என அந்த இளைஞர்கள் கூறுகின்றனர்.
தொல்புரத்தைச் சேர்ந்த குகநாதன் நிதுசன்(வயது 24) பாஸ்கரன் சுமித்தன் (22) ஆகிய இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி-கஜிந்தன்
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam