மிருசுவில் படுகொலை: சுனில் ரத்நாயக்க தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு - செய்திகளின் தொகுப்பு (Video)
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு எதிரான வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி தமது வீடுகளை பார்வையிட சென்ற பொது மக்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக சுனில் ரத்நாயக்க மீது குற்றஞ்சுமத்தப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவால் சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை எதிர்த்து மாற்றுக் கொள்கைக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தாக்கல் செய்த மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan